தகாத வார்த்­தை­களுக்கு பூட்டுபோடுவோம்.......

 

தகாத வார்த்­தை­களுக்கு பூட்டுபோடுவோம்.......

கோபம் வந்­தால் எல்லா மனி­தர்­க­ளும் தன்­னிலை
மறந்து போகி­றார்­கள். இதுவே வாய்­மொழி வன்­முறை
என்­ப­தா­கும். வாய்­மொழி வன்­மு­றை­யும் பல­ருக்கு மிகப்
பெ­ரிய மனக் காயத்தை ஏற்­ப­டுத்­தும். மற்­ற­வர் முன்­னி
லை­யில்கேலிசெய்­வது;மட்­டம் தட்­டிப் பேசு­வது;அவர்
பேச விரும்­பாத விஷ­யத்­தைப் பேசு­வது; குத்­திக்­காட்­டிப்
பேசு­வது; அவ­மா­னப்­ப­டுத்­தும் நோக்­கில் பேசு­வது;
அபாண்­ட­மான குற்­றச்­சாட்­டைச் சுமத்­து­வது ஆகிய
அனைத்­தும் வன்­மு­றையே. ஒரு­வ­ரு­டைய இனம், நிறம்,
வயது, தோற்­றம், இய­லாமை, மொழி, மதம், நம்­பிக்கை,
பாலி­னம் ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில்இழி­வா­கப் பேசி
னால் அது குற்­றம்.
வார்த்தை என்­பது ஒலி­க­ளின் ஓசை மட்­டுமா? அது
எழுத்­து­க­ளின் சேர்க்கை. வார்த்­தைகள் என்­பது சொற்­களின் கோர்வை.ஆகவே,சொற்­களைகோக்­கும்போது நம் சொற்­க­ளில் கவ­னம் இருக்க வேண்­டும். மனி­தர்­க­ளின் நாக்கு கத்­தி­யை­வி­டக் கூர்­மை­யா­னது. மோச­மான நாக்கு
ஒரு­வ­ரின் நம்­பிக்­கையை சிதைக்­கும்; பெரு­மையைப்
பொசுக்­கும்;உள்­ளத்­தில்ஆறாத ரணத்தை உண்­டாக்­கும்;
பழி­யைச் சுமத்­தும்; புகழைக் கெடுக்­கும்; ஊரையே அவருக்கு எதி­ரா­கத் திருப்பி, புழு­தி­வாரி தூற்ற வைக்­கும்.
சிதறாத வார்த்­தைகள் சீரான வாழ்க்­கையைத் தரும். வாய்­தவறி விழும் பேச்­சு­கள், கைத­வறி விழும்
கண்­ணா­டி­யை­வி­டக் கூர்­மை­யா­னவை. ஒரு­வ­ரி­டம் நாம்
பேசும்போது நாம் என்ன அர்த்­தத்­தில் பேசு­கி­றோம் என்­பதை­விட, நாம் கூறு­வ­தைக் கேட்­ப­வர் எந்த அர்த்­தத்­தில்
அதைப் புரிந்­து­கொள்­வார் என்­ப­தைக் கவ­னித்­துப் பேச வேண்­டும். ஒரே வார்த்­தை­யில் அதி­கபட்ச மகிழ்ச்­சி­யையும், ஒரே வார்த்­தை­யில் கடும் வேதனையை­யும் தரும்
வல்­லமை படைத்­தது நம் நாக்கு.
மவு­ன­மும், புன்­னகை­யும்­தான் இந்த உல­கில் மிக­வும்
சக்தி வாய்ந்த ஆயு­தங்­கள். புன்­னகை பிரச்­சி­னைகளைத்
தீர்க்­கும்; மவு­னமோ பிரச்­சி­னைகளே வர­வி­டா­மல் தடுக்கும். நம் மவு­னத்­தைக் கண்டு பயப்­ப­டு­வார்­கள். நாம் ஆழமா­கக் காயப்­பட்டு இருக்­கி­றோம் என்­ப­தை­யும் நம் மவுனம் உணர்த்­தும். யோசிக்­கா­மல் சட்­டென ஒரு வார்த்­தையைப் பேசி­விட்­டதால் முறிந்து போன உற­வு­களும், நட்­பும் ஏரா­ள­மாக இருக்­கக்­கூ­டும். அந்த
விநா­டி­யில்­அந்த வார்த்தை தவிர்க்­கப்­பட்­டி­ருந்­தால், பல
இன்­னல்­கள் காணா­மல் போயி­ருக்­கும். வீட்டு சண்­டையின்போ­தும் சட்­டென பேச்சு கடு­மை­யா­கிப் போய்­வி­டுகி­றது.வாய் வார்த்தை வளர்ந்துசர்ச்­சைக்குவித்­தி­டு­கி­றது.
கண­வன்-மனைவி,மாமி­யார்-­ம­ரு­ம­கள்
,மரு­ம­கன்-­மா­மனார், சகோதர, -சகோத­ரி­கள் இடையே சண்டை வரும்-
போது அதை கவ­னிக்­கும் குழந்­தைகள் அதி­கம் பாதிக்­கப்ப­டு­கி­றார்­கள்.
இதுஅவர்­க­ளின் மன­நி­லையைப் பாதித்து, படிப்­பில் இருக்­கும் நாட்­டத்­தை­யும் குறைத்­து­வி­டு­கி­றது.
வீட்­டில் அமை­தி­யான, இனி­மை­யான சூழல் இருந்­தால் மட்­டுமே குழந்­தைக­ளின் ஆளு­மைத்திறன் அதி­க­ரிக்­கும்.
அனை­வ­ரும் எதி­ரா­ளிக்கு சம­மாக நின்று பேச முடி­யாது; பேசத் தெரி­யாது. சண்டை போடப் பிடிக்­காத அவர்­கள் சகித்­துக் கொண்டு மவு­ன­மாக இருந்­து­வி­டு­வார்­கள். யார் பக்­கம் சரி,யார் பக்­கம் உண்மை உள்­ளதுஎன்­பதுஅபாண்ட­மா­கப் பேசு­ப­வ­ருக்­கும், அந்த ஆண்­ட­வ­னுக்­கும் தெரியும். அதுவே போதும். அவர்­கள் ஓர­ள­வுக்கு அடங்­கிப் போகி­றார்­கள். ஒரு­கட்­டத்­தில் அவர்­க­ளும் பொங்கி எழு
கி­றார்­கள். மிதிக்க மிதிக்க, நசுங்­கிச் சாவ­தற்கு ஒரு­வ­ரும் புழு அல்­லவே.
சொல்­லுக்­குச் சொல் சிங்­கா­ரம் எதற்கு? என்­பார்­கள்.
அது­போல பதி­லுக்கு தடித்த வார்த்­தைகளை விட்­டு­வி­டு­கி­றார்­கள். அந்த நபர் இவர் சொன்­னதை மட்டுமே அனை­வ­ரி­ட­மும் சொல்­லிச் சொல்லி பழி­சு­மத்­து­கிறார். சில சம­யம் வாய­டைத்­துத்­தான் போய்­வி­டு­கி­றது.
என்ன செய்ய? பேசவார்த்­தைகளற்றுஇருப்­பது,அமைதி
வார்த்­தைகள் இருந்­தும் பேசா­மல் இருப்­பது மவு­னம்.
தற்கொலைவய நிர்­ண­யிப்­பது சாலைகள் மட்­டு­மல்ல;
வார்த்­தைக­ளும்­தான். கூடு­மா­ன­வரை அவர்­களை மன்னித்து விடு­வோம். மன்­னிக்­காத மனம் அமி­லத்­தைப்
போன்­றது. மனதை அரித்­து­வி­டும்.
ஒரு நாள்ஒருகுதி­ரைக்­கா­ரன் ஒரு தோட்­டம் வழி­யா­கக்
கடந்துசெல்லநேர்ந்­தது.அவ­னதுகுதி­ரைக்­குத் தண்­ணீர் தரும்­படி விவ­சா­யி­யி­டம் கேட்­டான். விவ­சாயி மகிழ்ச்­சி
யோடு தண்­ணீர் எடுப்­ப­தற்கு பெர்­ஷி­யன் சக்­க­ரத்­தைச் சுழல­விட்­டான். ஆனால், குதிரை அந்த சத்­தத்­தைக்
கேட்டு பயந்து, கிணற்­றின் அருகே நெருங்கி வரவே இல்லை. குதி­ரைக்­கா­ரன் கேட்­டான்: “என் குதிரை தண்ணீர்குடிப்­ப­தற்­காக இந்­தச்சத்­தத்தை நிறுத்த முடி­யுமா?’’
“முடி­யாது ஐயா. உமது குதிரை தண்­ணீர் குடிக்க விரும்­பினால் இந்­தச்சத்­தத்­து­டன்­தான் குடிக்க வேண்­டும்.இங்கே சத்­தத்­து­டன்­தான் தண்­ணீர் வரும்’’ என்­றான் விவ­சாயி.
நட்­பு­கூட குறைபா­டு­க­ளு­டன்­தான் இருக்­கி­றது. வாழ்­வு
கூட மன்­னிக்­கும் மன­நி­லை­யில் இருந்­து­தான் ஊற்­றெடுக்­கி­றது. மன நிம்­ம­தி­யு­ட­னும், மன­நி­றை­வு­ட­னும் வாழ-
வேண்­டு­மா­னால், கோபம் வரும்போது நம் வார்த்­தைக­ளுக்­குக் கடி­வா­ளம் போட வேண்­டும்.

Comments