தீராத பிரச்சினைகளை தீர்க்க....

 சாதக தாரை பயன்பாடு

====================


இராமனின் நட்சத்திரம் புனர்பூசம் ஆகும். இராவணன் மீது போர் தொடுக்க இராமர் உத்திரம் நட்சத்திர நாளை தேர்ந்தெடுத்தார். உத்திரம் என்பது புனர்பூசத்தின் சாதக தாரை ஆகும். 


சாதக தாரை என்பது உங்கள் நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வரும் 6, 15, 24 வது நட்சத்திரம் ஆகும். அந்த நட்சத்திரம் வரும் எதாவது ஒரு நாளினை  கீழ்க்கண்ட விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்:


1. இந்த நாளில் தீராத கடனில் சிறுபகுதி கடன் தொகை கொடுக்க, கடன் பிரச்சனை தீரும். 


2. தீராத நோய்க்கு இந்நாளில் சிகிச்சை தொடங்கலாம் 


3. தீராத பிரச்சனைக்கு வழக்கு தொடங்க இந்நாளை பயன்படுத்தலாம்


4. அரசாங்க தேர்வு எழுத விண்ணப்பம் பூர்த்தி செய்ய இந்நாளை பயன்படுத்தலாம்.

Comments