அறிவு மற்றும் கற்றல் திறன் ஒரே ஒரு கிரகத்தால் மட்டும் நிர்ணயிக்கப்படுவ......

 வணக்கம் அனைவருக்கும்,


ஜோதிட சாஸ்திரத்தில், அறிவு மற்றும் கற்றல் திறன் ஒரே ஒரு கிரகத்தால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. இங்கே முக்கியமான கிரகங்களின் தாக்கங்கள் பற்றி விவரமாக பார்க்கலாம்:


1. புதன் – புதன் என்றால் அறிவுசேர்க்கை மற்றும் தொடர்ந்து கற்றல் ஆர்வம். ஒருவர் புதுசாக எதையாவது கற்றுக்கொள்ள விரும்புகிறவராக இருந்தால், அவரின் புதன் கிரகம் நன்றாக இருக்கும். அவர்கள் எளிதில் தகவல்களைப் பெறும் திறன் கொண்டவர்கள்.



2. குரு – குரு என்பது ஆசிரியர் அல்லது ஞானத்தின் பிரதிநிதி. இது ஆழமான அறிவை வழங்குகிறது. நல்ல நிலையில் குரு இருப்பவர்களுக்கு ஒரு விஷயத்தை முழுமையாக கற்றுக்கொள்ளும் எண்ணம் இருக்கும், அவர்கள் ஆழமாகவும் முழுமையாகவும் கற்க விரும்புவார்கள்.




இந்த இரண்டு கிரகங்களே அறிவாற்றலின் முக்கிய அடையாளங்கள்.


செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களையும் கருத்தில் கொள்ளலாம்:


செவ்வாய் – தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த அறிவு.


சுக்கிரன் – கலை, காதல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை பிரதிபலிக்கும்.



ராசிகள் மற்றும் கற்றல் முறைகள்


அக்கினி ராசிகள் (மேஷம், சிம்மம், தனுசு): புதன், குரு, செவ்வாய், சுக்கிரன் அல்லது 4-ஆவது அதிபதி இவற்றில் யாராவது அக்கினி ராசிகளில் இருந்தால், அவர்கள் துரிதமான கற்றல் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எளிதில் விழுங்கிக் கற்க, சுயமாக கற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர்கள்.


நீர் ராசிகள்: முக்கியமான கிரகங்கள் நீர் ராசிகளில் இருந்தால், சுயமாக கற்றல் முறையைப் பின்பற்ற வேண்டாம்; அவ்வாறு செய்தால் முழுமையாக கற்றுக்கொள்ள முடியாது. அதற்கு பதிலாக, ஒரு கல்வி நிலையத்தில் கற்றல் பயின்றால் நல்லது.


பூமி மற்றும் காற்று ராசிகள்: இவற்றில் கலந்துபோன முடிவுகள் காணலாம். முழுமையான பயிற்சியுடன் மற்றும் உதாரணங்கள் மூலம் கற்றல் அவசியம்.

நன்றி நன்றி நன்றி 

வணக்கம் 

Comments