பட்டினத்தாரின் ஊசி..
*பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டினத்தார்bஒரு ஊரில் தங்கினார்.*
*அவ்வூர் பணக்காரர் ஒருவர்*
*பட்டினத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்*
*இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான்*.
நினைத்ததை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது.
*உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்,”* *என்று பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்தினார்
*சற்று யோசித்த பட்டினத்தார் “ரொம்ப நல்லது.*
*அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே!” என்று கேட்டார்.*
*என்ன சுவாமி.. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்.*
*செய்ய காத்திருக்கிறேன்* *என்றார்*
*பணக்காரர்.*
*தன் பையில் இருந்து ஊசி ஒன்றை எடுத்த பட்டினத்தார், அதை பணக்காரரிடம் நீட்டினார்.*
*இந்த பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் சுவாமி” என்றார் பணக்காரர்.*
*இதைப் பத்திரமாக வைத்திருங்கள்*.
*நாம் இருவரும் இறந்தபிறகு மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக் கொடுத்தால் போதும்,” என்றார் பட்டினத்தார்.*
*இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வர முடியும் என்று கேட்டார் பணக்காரர்.*
*அவரைப் பார்த்து சிரித்த பட்டினத்தார் இந்த உலகை விட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக*
*முடியாது என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.*
*ஆனால்*
*நினைத்ததை சாதிக்கும் வலிமை இருப்பதாக தற்பெருமை பேசுகிறீர்களே….*
*ஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு கூட வரும்.*
*செல்வத்தால் யாரும் கர்வப்படத்*
*தேவையில்லை*
*அதை இல்லாதவர்களுக்கு* *கொடுத்து*
*உதவுங்கள்.*
*அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும்*
*என்று அறிவுரை கூறினார்.*
*வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் நம்முடன் வருவது, நமது நற்செயல்களால் கிடைத்த புண்ணியங்கள் மட்டுமே..*
*எனவே இருப்பதை மற்றவருக்கு கொடுத்து வாழுவோம்..*
நன்றி வணக்கம் 🙏🏻
வாழ்க வளர்க 🤲
வாழ்க வையகம் 🙌
Comments
Post a Comment